யாழ். பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்
நிகழ்ச்சியில் உங்களுடன் இணைந்து கொள்வது, மெல்பேர்ணிலிருந்து ராஜ், மற்றும் சிட்னியிலிருந்து சத்தியபாலன்.
பொ. பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பேராசிரியர். புவிச்சரிதவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1997க்கு அண்மித்த காலகட்டத்தில் இருந்தார். யாழ்பல்கலையினரால் இவருக்கு வாழ்நாட்கால பேராசிரியர் பட்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது.போருக்குப்பின்னதான சமகால யாழ்மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய கருத்தியல் சிந்தனையாளர்களுள் இவரும் ஒருவராவார்.
