23/May/22 திங்கள், Sydney /Melbourne நேரம் இரவு 8.30மணி
சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம் (Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam, பிறப்பு: 20 செப்டம்பர் 1990) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்
இவர் முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர்.[4][5] இவர் ராசபக்ச ஆட்சியின் ஆதரவாளராகவும், துணை இராணுவக் குழுத் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர். இவர் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
சாணக்கியன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
