வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்பிக்கும் சம கால நிலவரங்களின் அரங்கம்

பொன்னுத்துரை ஐங்கரநேசன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், சூழலியலாளரும்ஆவார்.

ஐங்கரநேசன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிசென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். ஆசிரியரான இவர் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடதி வந்தார்.

ஐங்கரநேசன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 22,660 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார். இவர் வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top