ஈழதமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், புலம்பெயர் தமிழ் மக்கள் தமது பங்களிப்பை பல்வேறு தளங்களில் ஆற்றி வருகின்றார்கள்.தற்போது மாகாணசபை தேர்தலை முன்வைத்தும், 13ம் திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்து அமுல்படுத்த கோரியும், புதிதாக ஆரம்பிக்கபட்ட இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு தனது பரப்புரைகளை செய்து வருகின்றது.
Focusthamil வானொலி, இதனை முன்னிட்டு இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்புக்கு ஒரு பரப்புரைக்களம் அமைத்துள்ளது. அதன் முதல் சந்திப்பின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நோக்கம், இலக்கு, உத்திகள், சவால்கள் எனபல்வேறு விடயங்கள் பேசப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜ் சிவநாதன் அவர்களை + 61 412 067 019 என்னும் இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
