வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு
ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார் 12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார். சதுரங்கம் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை […]
வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »


